2026 மே 14, வியாழக்கிழமை

‘நான்கும் திறக்கப்படாது’

Editorial   / 2021 மே 29 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளமையால், அக் காலப்பகுதியில் மதுபானசாலைகள், சிற்றுண்டிச்சாலைகள், இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் உடற்பயிற்சி (ஜிம்) நிலையங்களும் திறக்கப்பட மாட்டாதென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “வீடுகளுக்கே அத்தியாவசிய பொருள்களை விநியோகிப்பது குறித்து அவதானம் செலுத்துவதுடன், முறையான அனுமதி மற்றும் விநியோகத்தை
ஊக்குவிக்க பொருத்தமான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்த அவர்,
தடுப்பூசி செலுத்தும் விடயம் உரியமுறையில் முன்னெடுக்கப்பட்டு
வருவதுடன், குறித்த இடங்களுக்குச் சென்று தடைகளை ஏற்படுத்தல்
அல்லது தமது அதிகாரங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்”
என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .