Editorial / 2025 மே 06 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீச்சல் தடாகத்தில் விழுந்து நான்கு வயதான சிறுவன், உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெஸ்பேவ, கஹபொல பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தம்புத்தேகம, இகிலி வெவ பகுதியைச் சேர்ந்த ஹேவா எம்பிட்டகே சித்தேவ் தனுல்யா என்ற நான்கு வயது குழந்தை ஆவார்.
சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையுடன் தனது தந்தையின் சகோதரியின் வீட்டிற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சகோதரனும் சகோதரியும் தங்கள் சிறு குழந்தைகளுடன் பொழுதை கழிக்க விடுதிக்கு வந்ததாகவும், தாங்கள் சிறிது தூரத்தில் தங்கியிருந்ததாகவும், குழந்தைகளை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் மகிழ்விக்க விட்டுவிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026