2026 மே 14, வியாழக்கிழமை

நீராவி சுட்டதில் ஐவருக்கு எரிகாயம்

Niroshini   / 2021 மே 26 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக வீடுகளுக்குள்ளேயே பலரும் பல்வேறான கை வைத்தியங்களைச் செய்துகொள்கின்றனர். அதில், நீராவிப் பிடித்தல் முக்கியமானதாய் உள்ளது.

அவ்வாறு நீராவியைப் பிடிக்கும் போது, முகத்தில் ஏற்பட்ட எரிகாயம், சூடான நீர் ஊற்றப்பட்டிருக்கும் பாத்திரம் கவிழ்ந்து விழந்துவிடல் ஆகியவற்றினால் ஏற்பட்ட எரிகாயங்களால், ஐவர் பாதுகாப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த வைத்திய அதிகாரியொருவர், “நீராவியை முகத்துக்கு பிடித்துக்கொள்ளும் போது, மிகக்கவனமான பாதுகாப்பு முறைமைகளை கையாளவேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .