2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பிரதான வைத்தியசாலைகளில் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக, டெங்கு தீவிர சிகிச்சை பிரிவுகளையும், டெங்கு நோயாளர்களுக்கான விடுதித் தொகுதிகளையும் அமைக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இப்பணிப்புரையை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர், மிக விரைவில் இவற்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிரதான வைத்தியசாலைகளான கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, பாணந்துறை வைத்தியசாலை, கொழும்பு கிழக்குப் போதனா வைத்தியசாலை ஆகியன, இதற்காக மேல் மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கராப்பிட்டிய வைத்தியசாலையும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளிலும் இந்தப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.

தற்போது 7 மாவட்டங்களில், டெங்கு நோய் காணப்படுகின்றது.

பாடசாலை விடுமுறையின் பின்னர், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றை, எதிர்வரும் 24ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ள​மை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X