Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே. திஸாநாயக்கவை கைது செய்வதற்கு தேடிய போதிலும் அவர் மட்டக்களப்பிலும் இல்லை, கொழும்பு திம்பிரிகஸ்யாய வீட்டிலும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டமா அதிபர் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே பிரதி பொலிஸ் மா அதிபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வவுனியா குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அண்மையில் கடந்த ஜுன் மாதம் புதையல் தோண்டியோரை கைதுசெய்துசெய்வதற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளையே வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபராக அன்று கடமையாற்றிய யு.கே. திஸாநாயக்க தடுத்து நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர், மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதையில் தோண்டிய குற்றச்சாட்டில் கோடீஸ்வர வர்த்தகர் உட்பட 7பேர், விசேட பொலிஸ் குழுவின் நடவடிக்கையினால் பொலிஸ் அதிகாரி மேவன் சில்வாவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 May 2025