2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பங்காளி கட்சித் தலைவர்களுடனான ​பேச்சுவார்த்தை வெற்றி?

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சு வெற்றியளித்துள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்றிரவு 8 மணிக்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பித்த நிலையில்,  நள்ளிரவு வரை நீடித்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலே​யே,  அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு ​பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .