2026 மே 06, புதன்கிழமை

பட்டப்பகலில் துணிகரக் கொள்ளை: ’மேசன் பாஸ்’ கைவரிசை

Mayu   / 2026 மே 06 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை காலி வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில், அந்த வீட்டு வேலைகளுக்கு அடிக்கடி வந்து செல்லும் 'சிவா' என்ற மேசன் பாஸ் தலைமையிலான கும்பல், சுமார் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

சம்பவத்தின் பின்னணி:
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 3-ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில், இந்த கொள்ளை பட்டப்பகலில் அரங்கேறியுள்ளது.

வீட்டின் மூலைமுடுக்குகளை நன்கு அறிந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த மேசன் பாஸ் (சிவா), இதனைத் திட்டமிட்டு நடத்தியுள்ளார்.

வீட்டார் திரும்பி வந்து பார்த்தபோது, நகைகளும் பணமும் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சுமார் 6 பெண்கள் அணியும் 27 பவுண் புதிய நகைகள் மற்றும் 3 பவுண் பழைய நகைகள் என மொத்தம் 30 பவுண் நகைகள்.  சுமார் 6,000 திர்ஹம்கள் (UAE Dirhams).

முக்கிய சூத்திரதாரியான மேசன் பாஸ் தற்போது தலைமறைவாகியுள்ளதோடு, அவரது மனைவி மற்றும் கூட்டாளிகள் சிலரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CCTV காட்சியில் நீல நிற டீ-ஷர்ட் அணிந்திருப்பவரே இந்த கொள்ளையின் பிரதான சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலைமறைவாக உள்ள நபர் குறித்தோ அல்லது படத்தில் காட்டப்பட்டுள்ள நகைகள் விற்பனைக்கு வருவது குறித்தோ தகவல் தெரிந்தால், உடனடியாகக் கீழ்வரும் எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும். தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படுவதுடன், தகுந்த சன்மானமும் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு: 0773547789 / 0770629240


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .