Editorial / 2026 மே 06 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் நகரில் புதிதாகத் திறக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் மதுபான சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி வர்த்தகர்கள் கறுப்புக்கொடி கட்டி, கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த மதுபான சாலைக்கு நகர வர்த்தகர்கள் மட்டுமன்றி, பிரதேசவாசிகளும் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் நகரில் ஏற்கனவே மூன்று மதுபான சாலைகள் இயங்கி வருகின்றன. இவ்வாறானதொரு சூழலில், புதிதாக மற்றுமொரு மதுபான சாலையைத் திறக்க வேண்டிய தேவை என்ன? எனச் சமூக நலன்விரும்பிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போதுள்ள மதுபான சாலைகளுக்கு மிக அருகிலேயே வணக்கஸ்தலங்களும் பாடசாலைகளும் அமைந்துள்ளன. இதனால், மாணவர்கள் மதுபான சாலைகளைக் கடந்தே பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகள், மதுபோதையில் வருபவர்களால் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக அமையும் இந்தப் புதிய மதுபான சாலையைத் திறக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்த கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.







35 minute ago
46 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
46 minute ago
59 minute ago
1 hours ago