Editorial / 2026 மார்ச் 06 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் கடயமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை 05 பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாணவர்கள் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பிரிதொரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடயமோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுகும் 03 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 வயதுடைய சஞ்சன மற்றும் அதே பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய திலிப் மதுசங்க என்ற மாணவருமே இந்த விபத்தில் பலியாகிள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளாரா என்பது தொடர்பில் அறிவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago