2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

பதவி விலகினார் சந்தமாலி

S.Renuka   / 2026 பெப்ரவரி 19 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா சுகர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார்.

அரசியல் அழுத்தங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கோரிக்கைகள் காரணமாகவே அவர் பதிவி விலகியதாக கூறப்படுகின்றது.

தனது இராஜினாமா கடிதத்தை தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் அவர் சமர்ப்பித்த  சந்தமாலி சந்திரசேகர, நல்லாட்சி மற்றும் நிறுவனத்தின் நேர்மைத் தன்மையைப் பேணித் தனது கடமைகளைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .