2026 மே 02, சனிக்கிழமை

பதவியிலிருந்து விலகினார் ஸ்ரீதரன்

Nirosh   / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விலகியுள்ளார்.

இதுத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தான் கடந்த 5 வருடமாக குறித்த பதவியில் இருந்துள்ளதாகவும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமாக இல்லாமையாலும் அவர்கள் ஊடகங்களில் கொறடா  என்கின்ற பதவியினை வைத்து ஸ்ரீதரன்  பணம் சம்பாதிப்பது போல் ஒரு மாயயை உருவாக்கி வருகிறார்களெனவும் தெரிவித்தார்.

எனவே,  அவ்வாறானதொரு பதவி எனக்கு தேவை இல்லை என்று அந்தப் பதவியிலிருந்து வெளியேறியதாகவும், இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .