S.Renuka / 2026 ஜனவரி 06 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் ஏதேனும் பேரழிவு சூழ்நிலை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்கவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன கூறியுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பதுளை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது.
வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாத்தியமான ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அத்துடன், கனமழையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், மண்சரிவு அல்லது பாறை விழுதல் போன்ற அறிகுறிகள் குறித்து மக்கள் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், மழைமானி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு செய்வது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago