2025 ஜூன் 28, சனிக்கிழமை

’பலத்த காற்று வீசும் அபாயம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டல திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென் ஆகிய மாகாணங்களில் 75 மி.மீ க்கு அதிகமானளவில் மழை வீ​ழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரை பிரதேசங்களிலும் புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு வரையான கடற்​கரை பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் மணிக்கு 70 தொடக்கம் 80 கி.மீ வரை வேகமாக காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .