2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

பொலிஸ் பாதணிகளை அணிந்து நீதிமன்றம் சென்றவர் கைது

Janu   / 2025 நவம்பர் 03 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் வழங்கப்பட்ட பொலிஸ் விளையாட்டு பாதணிகளை அணிந்து புதுக்கடை மேல் நீதிமன்றத்திற்கு சென்ற, போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய , ராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்ததற்காக சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில்   நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக வந்த போது பொலிஸ் விளையாட்டு பாதணிகளை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.   

 இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின் போது, ​​பகோடை போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் தனக்கு குறித்த பாதணிகளை கொடுத்ததாகக் சந்தேக நபர் கூறியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X