Editorial / 2024 ஜூன் 24 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் பழ நுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக (1,283,039 மெட்ரிக் தொன்) அதிகரித்துள்ளது என விவசாயத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நாட்டின் வருடாந்தப் பழங்களின் தேவை 19.6 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். (196,9371 மெட்ரிக் தொன்). 2023ஆம் ஆண்டு பழ உற்பத்தி அதிகரிப்பைப் பார்க்கும் போது வாழை, மா, அன்னாசி, பப்பாளி போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளது என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர, 2023 ஆம் ஆண்டில் பழங்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. அதன்படி, 38,201 மெட்ரிக் தொன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
2027-ம் ஆண்டுக்குள் வாழை உற்பத்தி ஹெக்டேருக்கு 19.5 மெட்ரிக் தொன்னாகவும், மா உற்பத்தியை 9.5 மெட்ரிக் தொன்னாகவும், பப்பாளி 45 மெட்ரிக் தொன்னாகவும், அன்னாசி 14 மெட்ரிக் தொன்னாகவும், ஆரஞ்சு பழத்தை 30 மெட்ரிக் தொன்னாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரக இனப் பெருக்கம், கலப்பின இரகப் பெருக்கம், அதிக அடர்த்தி கொண்ட பயிர்ச்செய்கை, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு, தாவர ஊட்டச் சத்து அறிமுகம், பயிர் சேதத்தைக் குறைத்தல், அறிமுகப்படுத்துதல் போன்ற பல தொழில்நுட்ப நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என விவசாயத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கமனி ரணதுங்க,.
9 minute ago
28 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
44 minute ago