2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

’பாடசாலை திறப்பு குறித்து வார இறுதியில் தீர்மானம்’

J.A. George   / 2020 நவம்பர் 02 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

03ஆம் தவணைக்காக எதிர்வரும் 09ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இறுதியான தீர்மானத்தை இந்த வார இறுதியில் மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னர் பாடசாலைகளை தொடங்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர்களின் ஆரோக்கியம் மிக முக்கியமான காரணி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .