2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

பால் குடித்த 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரியபொல- ஹேரத்கம வித்தியாலயத்தில் பால் குடித்த மாணவர்கள் 28 பேர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நேற்றைய தினம்  பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சுவசெரிய அம்பியூலன்ஸ் மூலம் நிக்கவரெட்டிய, வாரியபொல வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 300 மாணவர்களுக்கு இன்று பால் பக்கட் வழங்கப்பட்டுள்ளதுடன் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே பால் அருந்திய பின்னர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .