2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'பிரச்சினைகளை உருவாக்கி தேர்தல்கள் ஒத்திவைப்பு'

Editorial   / 2019 ஜூலை 16 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கிடையில் பிரச்சனைகளை உருவாக்கி, தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராகி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் மிகவும் தந்திரத்துடன் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகளை நிறுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில், தேர்தல்கள் ஆணையாளரும் ஜனாதிபதியும் ஒருவர் மீது மற்றொருவர் பொறுப்புகளை சுமத்தி கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .