2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாக ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்  அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அலரி மாளிகைக்கு இன்று (06) அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானமொன்றுக்கு வந்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் கையெழுத்திட்ட கடிதமொன்றையும் பிரதமரிடம் இன்றைய தினம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .