2026 மே 02, சனிக்கிழமை

’புதிய அரசியலமைப்புக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணி உருவாக்கியுள்ள அரசியலமைப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் அனுமதி கிடைத்துள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் இன்று (04) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார். 

நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது, கூட்டணியை உருவாக்குவதில் காணப்பட்ட பிரதான பிரச்சினை தீர்த்துக்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைவுக்கு ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள சகல் கட்சிகளும் இணக்கம் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .