2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய கூட்டமைப்பு குறித்த பேச்சுவார்த்தை அடுத்தவாரம்

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியல் கூட்டமைப்பொன்றை அமைப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவால் நியமிக்கப்பட்ட  குழுவில்,   ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலரும் நியமிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

புதிய கூட்மைப்பொன்றை அமைப்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனக்கும் சு.க முக்கிய பிரமுகர்களுக்குமிடையில் நேற்று (06) 2 மணிநேர கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர,தினேஸ் குணவர்தன,விமல் வீரவன்ச,உதய கம்மன்பில ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

புதிய கூட்டமைப்பொன்றை அமைப்பது தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .