2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

புதிய பிரதேசங்களிலிருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் மினுவாங்கொட கொத்தனியில் அடையாளம் காணப்பட்ட 115 தொற்றாளர்களும் நாட்டின் 13 பிரதேசங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காண்பட்டவர்களுள் 32 பேர் மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 30 பேர் கட்டுநாயக்க பிரதேசத்தையும் 24 பேர் திவுலப்பிட்டிய, 11 பேர் பிங்கிரிய, 10 பேர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்தகம, ராகம, காலி, குளியாப்பிட்டிய, நிட்டம்புவ, கொடிகாவத்த, கராப்பிட்டிய, கஹத்துட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .