2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

புறக்கோட்டை பொலிஸூக்குள் புகுந்தது புது கொரோனா

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக  நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர், இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த இருவருடனும் தொடர்பிலிருந்த 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு  என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவேகமாக பரவிகொண்டுவரும் புது கொரோனாவே, பொலிஸாருக்கும் தொற்றியிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X