Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2025 மே 26 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில்வேக்கு அருகில் புறாக்களை விற்பனைச் செய்யும் கடை நடத்தி வரும் 41வயதான நபரொருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரில், ஒருவர் துப்பாக்கித்தாரி பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நளீம் நிஷார் (வயது 41), கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு பாதுகாப்பு தலைக்கவசங்கள், கொட்டாஞ்சேனை மட்டி பூங்கா பகுதியில் இருந்து பொலிஸாரினால் அன்றையதினமே கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago