Editorial / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரமழான் நோன்பு காலத்தின் போது இலவசமாக விநியோகிக்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரமழான் மாதத்தில் பாரம்பரியமாக முஸ்லிம்களால் உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழம், ஆண்டுதோறும் இராஜதந்திர பணிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடைகளாகவோ அல்லது பரிசுகளாகவோ பெறப்பட்டு முஸ்லிம் சமூகத்தினரிடையே விநியோகிக்கப்படுகிறது. இத்தகைய இறக்குமதிகள் அந்நியச் செலாவணி அல்லாத அடிப்படையில் செய்யப்படுகின்றன.
2026 ஆம் ஆண்டு, ரமழான் நோன்பு காலம் பெப்ரவரி 19 அன்று தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும்.
அதன்படி, ரமழான் பருவத்தில் நன்கொடையாகவோ அல்லது இலவச விநியோகத்திற்காகவோ இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்காக பௌத்தம், மதம் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Mar 2026