2025 ஜூலை 16, புதன்கிழமை

பேருவளையில் 65 பேருக்கு இன்று பீ.சி.ஆர் சோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா 

கொவிட் 19 வைரஸ் தொற்றினால், பேருவளையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபருடன், நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த, சீனக் கொட்டுவ, பன்னில பிரதேசங்களைச் சேர்ந்த 65 பேருக்கு இன்று (16) பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதலாவது தொற்றாளரின் மனைவி, குழந்தை, மனைவியின் தாய், தந்தை உள்ளிட்ட நால்வரும் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த 219 பேர், புணானை தனிமைப்படுத்தல்  நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 17 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .