2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பேஸ்புக் விருந்து: 26 பேர் கைது

Editorial   / 2025 ஜூன் 15 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு விடுமுறை விடுதியில், பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்தை முற்றுகையிட்ட பின்னர், தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் பத்து பேர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, மஹபெல்லானவில் உள்ள ஒரு விடுமுறை விடுதியிலேயே இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 கிலோகிராம் கஞ்சா மற்றும் ஹாஷிஷை வைத்திருந்தனர். கைது செய்யப்பட்டபோது அனைத்து சந்தேக நபர்களும் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹபெல்லான தோட்டுபொல சாலையில் உள்ள ஒரு விடுமுறை விடுதிக்கு வந்த ஒரு குழு கூச்சலிட்டு, உரத்த இசையை இசைத்து தொந்தரவு செய்வதாகக் கூறி, 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்குஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 1.30 மணியளவில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X