2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’பொது வேட்பாளரை நிறுத்தமுடியாவிட்டால் மாற்றுவழி’

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தொடர்ந்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தனித்து களமிறக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தெளிவான பதிலொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதுவரை வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .