2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் தொடர்பான தகவல்கள் சபாநாயகரிடம் கையளிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் தொடர்பான தகவல்களை சபாநாயகர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளித்துள்ளதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்காகச் செயற்படும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர் ஒருவரும் கொக்கைன் பயன்படுத்துபவர்கள் வரிசையில் இருப்பதாகவும் நீர்கொழும்பு பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர், ஹம்பாந்தோட்டை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொக்கைன் உள்ளிட்ட 11 வகையான போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பான இரத்த பரிசோதனையை மேற்கொள்ள 4200 ரூபாய் செலவாவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன், எதிர்வரும் நாள்களில்  தான் இந்த பரிசோதனையை மேற்கொண்டு அதன் அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .