2025 ஜூன் 14, சனிக்கிழமை

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது

Editorial   / 2020 ஜூன் 12 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 455 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (11) காலை 06 மணிமுதல் இன்று (12) அதிகாலை வரை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் வைத்திருந்த 170 பேர், கஞ்சா வைத்திருந்த 87 பேர், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 147 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஐஸ், மாவா, பாபுல் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களை வைத்திருந்த 51 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .