Simrith / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு வலுவான மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத நடைமுறைகளை நிறுத்த அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று வலியுறுத்தினார்.
சுகததாச உட்புற அரங்கில் நடைபெற்ற ஒன்றுபட்ட ஒரு தேசம் தேசிய மிஷனின் தொடக்க விழாவில் பேசிய அவர், அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் தனியாக அதை எதிர்கொள்ள முடியாது என்று கூறி, அழிவுகரமான அச்சுறுத்தலை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக பொலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் புலனாய்வு சேவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய செயல்பாட்டு மையம் நிறுவப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago