2026 மே 02, சனிக்கிழமை

’பௌத்தர்களின் இறுதி சடங்குக்கும் ஆப்பு’

Editorial   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம், அறிவியலுக்குப் பதிலாக, கட்டுக்கதைகளைத் தொடர்கிறது. அதன் மூலம், அனைத்துச் சமூகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுகின்றது எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பௌத்தர்களின் இறுதிச் சடங்குகளையும் அரசாங்கம் இல்லாமல் செய்து விட்டது என்றார். 

'வலுக்கட்டாயமாகத் தகனம் செய்வதை நிறுத்தவும் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும்' என்ற கருப்பொருளில், பொரளை, கனத்தை மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளையும் பக்கச்சார்பற்ற குழுவின் பரிந்துரைகளையும் அரசாங்கம் புறக்கணித்து வருவதாகவும், இது இனம், மதம் சார்ந்த விடயம் அல்ல' என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .