2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மாணவனுக்கு போதை புகையிலை விற்றவர் சிக்கினார்

George   / 2016 ஜூன் 13 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெட்டிக் கடையில் பொருட்களை விற்பதாகக்கூறி பாடசாலை மாணவர்களுக்கு போதை புகையிலை வழங்கிய நபரொருவர் கொழும்பு மருதானையில்  இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், பாடசாலை மாணவனுக்கு போதை புகையிலை விற்பனைசெய்த போது, அருகில் இருந்த போதை பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து போதை புகையிலை 2 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .