2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மிஹின் லங்கா ஊழியர்கள் போராட்டம்

George   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹின் லங்கா நிறுவனத்தின் கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்தில் இன்று மாலை பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மிஹின் லங்கா உயரதிகாரிகள் மூன்று பேரை, அலுவலகத்துக்குள் ஊழியர்கள் தடுத்துவைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

மிஹின் லங்கா பிராதான அலுவலகத்தின் மனிதவள முகாமையாளர், நிதி மற்றும் நிர்வாக தலைமை அதிகாரிகள் ஆகிய மூவரே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மிஹின் லங்கா நிறுவனம் எதிர்வரும் 30ஆம் திகதி முதல், ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கீழ், கொண்டுவரப்படவுள்ளது.

இந்நிலையில், தமக்கு வேலை வாய்ப்போ அல்லது நட்டஈடோ பெற்றுக்கொடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கு வேலைவாயப்பு பெற்று தரவேண்டும் அல்லது, தம்மை பணி நீக்கம் செய்வதாக இருந்தால், அதற்கு உரிய நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .