2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மசாஜ் செய்வதில் அனுபவம் பெற்ற ​பெண்ணை கடத்த முயற்சி

Gavitha   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 மசாஜ் நிலையங்களை நடத்துவதற்காக, ஏற்கெனவே மசாஜ் செய்வதில் அனுபவம் கொண்ட பெண்ணொருவரை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம், மொனராகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எனினும், குறித்த பெண் கடத்தப்படுவதற்கு முன்னர், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது, அப்பெண் காப்பாற்றப்பட்டதாகவும் கடத்தலுடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவருடைய மசாஜ் நிலையத்தில், பெண்ணொருவர் கடமையாற்றி வந்துள்ளார். எனினும், அவர் சிறிது காலத்தின் பின்னர் அங்கிருந்து விலகியுள்ளார்.

எனினும், ஐந்து மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த வர்த்தகர், அந்தப் பெண்ணை, தனது ஆதரவாளர்களைக் கொண்டு கடத்தி வருவதற்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், வர்த்தகவும் அவருடைய ஆதரவாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X