2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை

Freelancer   / 2025 டிசெம்பர் 27 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் இன்றைய (27) நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில், இலங்கையில் இன்று (27) மாத்திரம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் மாத்திரம் 12,000 ரூபாவினால் தங்க விலை அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, நேற்றைய தினம் 329,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X