Janu / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மதில் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
அருகிலுள்ள நகர சபை வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெக்கோ இயந்திரம் ஒன்று மதிலுடன் மோதியதில், மதிலின் ஒரு பகுதி பாடசாலை வளாகத்தினுள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், குறித்த மாணவன் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.


6 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
3 hours ago