2025 ஜூலை 31, வியாழக்கிழமை

முன்னாள் டிஐஜி பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்

R.Tharaniya   / 2025 ஜூலை 30 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் போலி முறைப்பாடு ஒன்றை வழங்கியமை தொடர்பில் முன்னாள் டிஐஜி பிரியந்த ஜயக்கொடி கடந்த திங்கட்கிழமை (28) மாலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்த வகையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஐஜி பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வா செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .