2025 ஜூன் 14, சனிக்கிழமை

மரணத் தண்டனை கைதிகளுக்காக தயார் செய்யப்படும் தீவு

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய குற்றங்கள் தொடர்பில் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள், மட்டக்களப்பில் உள்ள தீவொன்றில் தடுத்து வைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதென, நீதிமன்ற அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.


நேற்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் தொழு நோயாளர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தீவில், தற்போது இரண்டு நோயாளர்கள் மாத்திரமே இருப்பதாகவும், அவர்கள் இருவரும் தற்போது பூரண குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், இந்தத் தீவை சிறைச்சாலைகள் திணைக்களம் பொறுப்பேற்று, பாரிய குற்றங்களை செய்த குற்றவாளிகள் மற்றும் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்களை இத்தீவில் தடுத்து வைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .