2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மற்றுமொரு விசாரணை ஆணைக்குழு நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்தாண்டு வரையான காலப்பகுதிக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள், அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமைத் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை குறித்த விசாரணை ஆணைக்குழு 2010ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள மோசடிகள், முறைகேடுகள் குறித்த முன்னெடுத்த விசாரணை அறிக்கையானது கடந்த 2ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .