2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மலேசியாவில் கைதான 26 இலங்கை குற்றவாளிகள்

S.Renuka   / 2025 ஜூலை 15 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவில் பல்வேறு குற்றங்களுக்காக  மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 26 இலங்கை  குற்றவாளிகளை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.உட்லர் தெரிவித்துள்ளார். 

பொலிஸ் ஊடகப் பிரிவில் திங்கட்கிழமை (14) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும், இந்த குற்றவாளிகளை விசாரிக்கவும் அவர்களை நாடு கடத்துவது குறித்து விவாதிக்கவும் ஒரு சிறப்பு பொலிஸ்  குழு மலேசியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

மலேசிய பொலிஸ் காவலில் உள்ள குற்றவாளிகள் தொடர்பான புகைப்படங்கள் உட்பட அனைத்து தகவல்களும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளதாக உட்லர் கூறுகிறார்.

கைது செய்யப்பட்ட இரண்டு பாதாள உலகக் குற்றவாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
மேலும், அவர்களில் ஒருவர் 20 வயதுடைய இளைஞர் என்று பொலிஸ் தரப்பில் கூறுகிறது.

இந்த இரண்டு குற்றவாளிகள் தொடர்பாக மாநில புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் குற்றப் பதிவுப் பிரிவு மூலம் பெறப்பட்ட தகவல்களும் மலேசிய காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா ஆகிய இரண்டு பாதாள உலகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக நாடு முழுவதும் மிகவும் சர்ச்சைக்குரிய செய்தி பரவியது.

இந்த விவகாரத்தை விசாரிக்க இரண்டு சிறப்பு காவல் குழுக்கள் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்றிருந்தன. ஆனால், அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தக் கைது தொடர்பாக, மலேசியா-தாய்லாந்து எல்லையில் இருந்த அரசு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து இரண்டு பாதாள உலகத் தலைவர்களும் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் இருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தற்போது கூறுகின்றன.

இருப்பினும், கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக மலேசிய பொலிஸாரிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. உட்லர் தெரிவித்தார்.

மேலும், ஜனவரி 1 முதல் ஜூலை 13 வரை 2308 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த எஃப்.யு. உட்லர் மேலும் கூறினார்.

இந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது 23 வு56 ஆயுதங்கள் மற்றும் 46 கைத்துப்பாக்கிகள் உட்பட பல்வேறு வகையான 1165 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறினார்.

இந்த ஏழு மாத காலத்தில் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக 27 பாதாள உலகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. உட்லர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .