2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மாவீரர் வாரத்தின் முதல் நாள்; கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Editorial   / 2025 நவம்பர் 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21) அன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர் வாரத்தின் முதல் நாளில்  கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலியை செலுத்தினார்.

அந்த வகையில் மாவீரர் துயிலுமில்லத்தினை தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை செலுத்தினார்.

மேலும் 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ள நிலையில்,   கொழும்பிலேயே பாராளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X