Editorial / 2026 மார்ச் 31 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவன் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அதிபர், இன்று (31) காலை மகாவெல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த பாடசாலையில் பயிலும் 14 வயது மாணவனை அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மகாவெல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த அதிபரைக் கைது செய்யப் பல பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடத்தின. அவர் பல்வேறு இடங்களில் ஒளிந்திருப்பதாகப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், வேறு வழியின்றி அவர் இன்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.
6 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago