2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மாமியாரை வன்புணர்ந்து 35 பவுண் நகை கொள்ளை

Mayu   / 2024 ஒக்டோபர் 08 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வீட்டிலிருந்த 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (6) களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கணவர் இல்லாத நிலையில், தனது  (22) மகள் திருமணம் முடித்து வேறு இடத்தில் வாழ்ந்து வருகின்றதுடன் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

சம்பவம் குறித்து திங்கட்கிழமை (07) இரவு பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மருமகன் மற்றும் 16 பேரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X