2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மாரவில பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா

S. Shivany   / 2020 நவம்பர் 10 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாரவில- மாவில பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, நாத்தண்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

சிவில் பாதுகாப்புச் சேவையில் பணியாற்றும் பெண்ணும் அவருடைய 06, 02 வயது குழந்தைகளுமே இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற்படி பெண் கட்டுநாயக்கவில் பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 
மேற்படி பெண்ணின் கணவரும் இதற்கு முன்னர் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர் சிவில் பாதுகாப்பு பிரிவில் சாரதியாக பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .