2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Janu   / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவுலபெலஸ்ஸ, தெல்தெனியாய 16ஆம் கால்வாய் பகுதியில் உள்ள வயல் நிலமொன்றில் நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (05) மாலை சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக திவுலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

திவுலபெலஸ்ஸ, வேவபிட்டிய பகுதியை சேர்ந்த தென்னக்கோன் முதியன்சேலாகே டில்ஷான் ரஞ்சன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாரோ ஒருவரால் குறித்த வயல் நிலத்தில் சட்டவிரோதமான முறையில் இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .