2026 மே 02, சனிக்கிழமை

மிரிஹான முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில், கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் 44 பேர் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர். 

25 முதல் 50 வயதுகளுக்கு இடைப்பட்ட குறித்த இந்தியர்கள், கடந்த சில வருடங்களாக சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட 44 பேரும் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .