2025 ஜூன் 28, சனிக்கிழமை

முன்னாள் தளபதிகளுக்கு பதவியுயர்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு கௌரவ பதவி நிலை அளிக்கும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது.

இறுதிக்கட்டப் போரில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட்  (Admiral of the Fleet) ஆக பதவியுயர்த்தப்பட்டார்.

விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய எயர் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ்( Marshal of the Sri Lanka Air Force) ஆக பதவியுயர்த்தப்பட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடந்த 2015 ஆம் ஆண்டு பதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்டிருந்தார்.

அவரது பதவிக்கு இணையான பதவி நிலைகளாக இவை காணப்படுகின்றன.

இந்த உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும்  நிகழ்வு கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .