2025 ஜூன் 25, புதன்கிழமை

முன்னிலை சோசலிஷக் கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரைக் களமிறக்கும்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னிலை சோசலிஷக் கட்சியின் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக, அக்கட்சியின் தோட்டத் தொழிலாளர் மையத்தின் தலைவர் வசந்த ஸ்ரீ அபேகோன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அக்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது நாட்டுக்கு இடதுசாரி அரசியல் கட்சியொன்று தேவைப்படுவதால், இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட வலுவான வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க உள்ளதாக தெரிவித்த அவர்,  அண்மையில் கொழும்பில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில், தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார் எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .