Editorial / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலைப் பேருந்தில் அழைத்து வரப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான ராஜித சேனாரத்னவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன, விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், நீதிமன்றத்தைத் தவிர்க்கும் சந்தேக நபராகவும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பெற்ற நபராகவும் ராஜித சேனாரத்ன இருப்பதால் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
9 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
52 minute ago